தலையிடிக்கிறது இப்போதெல்லாம்
கொஞ்சம் அதிகமாக ,
தூக்கமாத்திரை இல்லாத
இரவுகள் இனி
இல்லாமல் போகுமோ ?
பயமாய் இருக்கிறது ........
வாசிப்புக்காய் தலையணை அருகிருக்கும்
புத்தகத்தை தொட்டால் ,
அறையெங்கும் ஓலமிடுகிறது _என்னால்
கோர்க்க இயலாமல் போன
சொற்கள் ௬ட்டம் ௬ட்டமாக ,
காதடைக்கும் ஒலி கடந்து
ஒளியனைத்து விழி மூடினால் ,
ஏதேதோ படர்வுகள் இருளுள்ளே
உதறவும் முடியாமல் உணரவும் முடியாமல் ........
அறுந்தறுந்து வரும்_அந்த
நினைவுநிழல்கள் அனுங்கிக்கொண்டு
தற்கொலை செய்கின்றன .....
எங்கும் சகிக்க முடியாத மயான
எரிதலின் வாசம் பரவ
கைகளால் இறுக்கிக்கொள்கிறேன் தலையை ,
நிலவும் நீள் நிசப்தத்தில்
அந்தரங்கமாய் அழுதுமுடிகையில்
அநாதரவாய் அந்தரத்தில்
நிற்கிறது ஒரு பெரும் சுமை .................
முகத்திலறையும் நிராகரிப்பை விட
மிக மிக கேவலமாய்
குனிந்து கொள்கிறேன்
இன்றைய தூக்கமும்
இல்லாமல் போகிறது ,
நேற்றையைப்போல .............................
தூக்கமில்லாத இரவுகளில் வரும் மன உளைச்சல்கள். துயரங்க களை பகிருங்களது பாதியாகும்
ReplyDelete